பேசிட்டு தான் குடும்பம் நடத்த வருவேன்... அடம்பிடித்த மனைவியை கணவன் கத்தியால் குத்திக் கொலை !

 
சீதா - சின்னமுத்து

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி கல்லாவியை அடுத்த வெள்ளிமலையைச் சேர்ந்தவர் சின்னமுத்து (40). கூலித்தொழிலாளியான இவரது மனைவி சீதா (36). இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். ஒருகட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்த சீதா, செங்கலநீர்பட்டி கிராமத்தில் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். சின்னமுத்து அடிக்கடி சீதாவுக்கு போன் செய்து தன்னுடன் வந்து வாழுமாறு தகராறு செய்துள்ளார். ஆனால் சீதா மறுத்துள்ளார். நேற்று முன்தினம், செங்கலநீர்பட்டிக்கு சின்னமுத்து சென்றார்.

பின்னர், குடிபோதையில், குடும்பம் நடத்த வருமாறு மனைவிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், வழக்கம் போல் சீதா மறுத்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன்பின், அக்கா மகன் வேடியப்பனிடம் பேசிவிட்டு வீட்டுக்கு செல்லலாம் என கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் வேடியப்பன் வேலை பார்க்கும் மாந்தோப்புக்கு சென்றனர். அங்கே வேடியப்பன் இல்லை.

இதனால் இருவரும் அங்கேயே தங்கியுள்ளனர். வெகு நேரமாக வேடியப்பன் வராததால் வீட்டுக்குப் போகலாம். இன்னொரு நாள் வந்து வேடியப்பனைப் பார்த்துக் கொள்ளலாம் என்றார் சின்னமுத்து. ஆனால் வேடியப்பனிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று சீதா கூறியதால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த சின்னமுத்து, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சீதாவின் வயிற்றில் குத்தினார். இதில் சீதா ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரழந்தார். பின்னர் சின்னமுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

நேற்று அதிகாலை மாந்தோப்புக்கு வந்த வேடியப்பன், சீதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மனைவியைக் கொன்று விட்டு ஓடிய சின்னமுத்துவை, பர்கூர் டிஎஸ்பி பிருத்விராஜ் தலைமையிலான தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web