நான் எம்.எல்.ஏ பேசுறேன்.. பயங்கர உருட்டு உருட்டி மெகா மோசடி.. பல லட்சம் அபேஸ்.. அதிர்ச்சி பின்னணி!

 
 ரவி

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவன உரிமையாளருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் போன் வந்தது. காங்கேயம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ பேசுவதாக கூறி பணம் கேட்டார். இதையடுத்து, நிறுவனத்தின் உரிமையாளர் மேலாளர் மூலம், 50 ஆயிரம் ரூபாய் பண பரிவர்த்தனை மூலம் அனுப்பப்பட்டுள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்நிறுவன மேலாளர் ஈரோடு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த 4ம் தேதி புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், திருச்சி பேருந்து நிலையத்தில் உள்ள பணப் பரிவர்த்தனை கடையில் பணப் பரிவர்த்தனை நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த மோசடியில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் பகுதியைச் சேர்ந்த ரவியை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியபோது, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பெரிய தொழிலதிபர்களிடம் 63 வயது முதியவர் பேசியது தெரிந்தது. அவரது செல்போன் மூலம் முன்னாள் எம்எல்ஏ, எம்பி மற்றும் தற்போதைய எம்எல்ஏ, எம்பி என்ற பெயரில் போன் செய்து பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.

செல்போன்

இதுவரை 4 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் லட்சக்கணக்கில் பணம் பெற்றிருக்கலாம் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், கோவை எம்எல்ஏ அம்மன் அர்ச்சுணன் பெயரில் தொழிலதிபர்களிடம் பணம் வசூலிக்க பயன்படுத்திய மொபைல் போன் எண்ணும், அவர் பயன்படுத்திய மொபைல் எண்ணும் ஒன்று என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, கைதான ரவியிடம் இருந்து 2 செல்போன் , 3 சிம்கார்டுகள் மற்றும் தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் அடங்கிய நோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web