செம... தமிழகத்தில் மே 14 வரை வெறும் கண்களால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பார்க்கலாம்!

 
சர்வதேச விண்வெளி ஆய்வு மையம்

 சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே 14 வரை வெறும் கண்களால் பார்த்து மகிழலாம் என  நாசா தெரிவித்துள்ளது.  விண்வெளியில் நாசா உடன் இணைந்து பல்வேறு நாடுகள் அமைத்துள்ள இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் 13 முறை பூமியை சுற்றி வருகிறது. மணிக்கு 28000  கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த மையத்தில், விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை சென்னையில் இருந்து வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா  அறிவித்திருந்தது.

நாசா

நேற்று இரவு 7.09 மணி முதல் வெறும் கண்களால் 7 நிமிடங்களுக்கு வானில் தெரியும் எனத்  தெரிவிக்கப்பட்டு இருந்தது.சர்வதேச விண்வெளி மையம் மிகவும் பிரகாசமாக இருக்கும். இதனால் இதனை  வெறும் கண்களால் பார்க்க முடியும். இதனால் நேற்று ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் வானத்தை ஆவலுடன் பார்த்தபடி இருந்தனர். ஏற்கனவே அறிவித்தபடி 7.09 மணிக்கு மேல் வெளிச்ச புள்ளியாகவும், சற்று நீண்ட கோடாகவும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை பார்க்க முடிந்ததாகக் கூறினார்.  சென்னையின் பல இடங்களில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் கடந்து செல்வதை மக்கள் பார்த்து ரசித்தனர்.

நாசா
கோவையில் இருந்து சென்னை வரை இருக்கும் மாவட்ட மக்கள் மே 14ம் தேதி வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பார்க்கலாம் என நாசா அறிவித்துள்ளது. கோவை, உதகை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, விழுப்புரம் மக்கள் வெறும் கண்ணால் விண்வெளி மையத்தை பார்க்கலாம்   மே 12 காலை 4.14, இரவு 7.07, மே 13 காலை 5, மே 14 காலை 4.14 மணிக்கு விண்வெளி மையத்தை காணலாம் என நாசா தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web