10,+2 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை... இரண்டு கட்டங்களாக கல்வி விருது விழா... நடிகர் விஜய் அறிவிப்பு!

 
விஜய்

 நடந்து முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கும் கல்வி விருது விழா இந்த வருடம் இரண்டு கட்டங்களாக நடத்த தமிழக வெற்றிக் கழகத்தினர் முடிவு செய்துள்ளார்.கடந்த வருடம் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததால், இந்த வருடம், இந்த விழாவினை இரண்டு கட்டங்களாக நடத்த முடிவெடுத்துள்ளனர். முதல் கட்டமாக இந்த மாத இறுதியிலும், இரண்டாம் கட்டம் அடுத்த மாதத்திலும் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘முதற்கட்ட நிகழ்வு 28.06.2024-ல் சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.


அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 03-07-2024 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சு, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web