ஆபரேஷன் சிந்தூரில் ராணுவ வீரர்களுக்கு உதவிய சிறுவனின் கல்விச் செலவை ஏற்றது இந்திய ராணுவம்!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு தேனீர், பால், தண்ணீர், லஸ்ஸி உட்பட பல அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்த 10 வயது சிறுவன் ஷ்ரவன் சிங். இவரது படிப்புச் செலவை இந்திய ராணுவம் ஏற்றது. இந்நிலையில், இச்சிறுவனின் துணிச்சலை பாராட்டும் வகையில், அவரது முழு கல்வி செலவையும் ஏற்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. சிறுவனை நேரில் அழைத்துப் மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் பாராட்டினார்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்பது ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் பொதுமக்கள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஒரு எல்லை தாண்டிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இந்த நடவடிக்கை மே 7, 2025 அன்று நடத்தப்பட்டது, மேலும் இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த தாக்குதலின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு தேனீர், பால், தண்ணீர், லஸ்ஸி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து 10 வயது சிறுவன் ஷ்ரவன் சிங்கின் உதவினான். சிறுவனின் துணிச்சலை பாராட்டும் வகையில், அவரது முழு கல்வி செலவையும் ஏற்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் சிறுவனை நேரில் அழைத்துப் மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் பாராட்டி மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் சிறுவனுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
