பள்ளிகளில் 1 மணி முதல் 1.20 வரை புதிய பாடவேளை அறிமுகம்!

 
பள்ளிகள்

 தமிழகம் முழுவதும்  கோடை விடுமுறை முடிவடைந்து நாளை ஜூன் 10ம் தேதி  பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் கல்வித்தரம் மாணவர்கள் திறமை கொண்டு வரப்பட வேண்டும் என தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் பள்ளிகளில் கல்வி சாரா செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 


அதன் ஒரு பகுதியாக இலக்கிய மன்றம், தனித்திறன் பயிற்சி வகுப்புகள், ஒரு மணி முதல் 1.20 மணி வரை சிறார் இதழ்கள் வாசித்தல்  பாடவேளை , இலக்கிய மன்றம், வினாடி வினா, சுற்றுச்சூழல் மன்றம், கலை, கைவண்ணம், இசை, வாய்ப்பாட்டு பாட வேலை மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வகுப்புகள் என மாணவர்களின் கல்வி சாரா செயல்பாடுகளுக்கு வாரத்திற்கு 16 பாட வேலைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதனால் மாணவர்களின் தனித்திறமை மேம்படும் என தெரிவித்துள்ளது. வழக்கம் போல்  நாளை பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. அதற்கான பணிகள் அனைத்தும் செய்யப்பட்டு தயார்நிலையில் வைக்கபப்ட்டுள்ளன.

பள்ளிகள்

பள்ளிகளில் தூய்மைப் பணிகள் செய்ய உத்தரவிடப்பட்டது. இதனை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் 220 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் 1 முதல் 3ம் வகுப்பு வரை ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்பு,  9ம் வகுப்பு  முதல்  12 ம் வகுப்பு  வரை உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி பாட வேலையும் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  இதன் மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக  பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web