இந்தியா முழுவதும் 10000 பொதுமக்களுக்கு குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ள அழைப்பு!
ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் மக்களின் பங்கேற்பை அதிகரிக்க செய்யும் வகையில் பல்வேறு முக்கிய விழாக்களுக்கு சாமானிய மக்களும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதை மத்திய அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் டெல்லி கடமைப்பாதையில் ஜனவரி 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்கு பொதுமக்களில் பல தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் நடப்பாண்டில் 10000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கிராமத்தை கவனிக்கும் முக்கிய நபர்கள், பேரிடர் நிவாரண பணியாளர்கள், சிறந்த கிராமங்களின் முக்கியஸ்தர்கள், வனம் மற்றும் வனவிலங்கு பாதுகாவலர்கள், கைவினைஞர்கள், கைத்தறி கைவினைஞர்கள், பல்வேறு திட்டங்களின் சாதனையாளர்கள், அங்கீகாரம் பெற்ற சமூகநல ஆர்வலர்கள், 'மன்கி பாத்' பங்கேற்பாளர்கள், பாரா ஒலிம்பிக் வீரர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட 31 பிரிவுகளில் பொதுமக்கள் அழைக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் குடியரசு தின விழாவில் பங்கேற்பது மட்டும் அல்லாமல் தேசிய போர் நினைவிடம், பிரதமர் சங்கராலயா போன்ற இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்படுவர். குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் பிற நாடுகளின் தலைவர்களும் முக்கிய விருந்தினராக கலந்த் கொள்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு இந்தோனேஷிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!