இவர் ஆளுநரா? பாஜகவின் ஏஜென்டா? எம்.பி., ஜோதிமணி விளாசல்!
தமிழகத்தில் புத்தாண்டு தொடக்கத்தில் ஆளுநர் உரையுடன் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் ஆளுநர் ரவி தொடர்ந்து 2வது முறையாக அவையை அவமதித்து உரையை வாசிக்காமல் சென்று விட்டார்.
இது குறித்து கரூர் எம்.பி. செ.ஜோதிமணி பேசுசுகையில், “பாஜகவின் ஏஜென்டாக ஆளுநர் ரவி தமிழ்நாட்டில் செயல்பட்டு வருவதாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களை அவமதிக்கும் நோக்கத்தில் ஆளுநர் ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இதை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆளுநருக்கு உரிய மாண்புடன் ரவி செயல்பட தவறி விட்டார்.ஆளுநர் வசதிக்காக தமிழ்நாடு மக்கள் தங்களது கலாச்சாரங்களையும், பண்பாட்டையும் மாற்றிக் கொள்ள முடியாது. இன்று தேசிய கீதம் முதலில் பாடவேண்டும் என்பார். நாளை ஆளுநர் உரையை இந்தியில் எழுதிக் கொடுக்க சொல்வார்.
இதையெல்லாம் தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மக்களும் செய்து கொடுக்க முடியாது. ஆளுநர் வைத்த சட்டங்களுக்கு எல்லாம் தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு மக்களும் ஆட முடியாது” என ஆவேசமாக கூறியுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!