காசா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.. ஹமாஸ் படையினர் உட்பட 200 பேர் பலி!
![இஸ்ரேல் - ஹமாஸ்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/ff6184b207ca5606875c55ec29422e8b.jpg)
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக் குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தீவிரவாத தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், ஹமாஸ் இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணயக்கைதிகளாக காசாவிற்கு கடத்தினார். இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக் குழு மீது இஸ்ரேல் போரை அறிவித்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை மீட்டது.
120 பேர் இன்னும் பிணைக் கைதிகளாக இருப்பதாகவும், அவர்களில் சிலர் இறந்திருக்கலாம் என்றும் இஸ்ரேல் கூறியது. இதற்கிடையில், பணயக்கைதிகளை மீட்பதற்கும் ஹமாஸ் ஆயுதக் குழுவை ஒழிப்பதற்கும் இஸ்ரேல் காசா பகுதியில் போரைத் தொடங்கியது. இந்தப் போரில், ஹமாஸ் ஆயுதக் குழு உட்பட 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காஸாவில் உயிரிழந்துள்ளனர். இதேபோல் மேற்குக் கரையில் நடந்த மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக் குழுவால் கடத்தப்பட்ட இஸ்ரேலிய பிணைக் கைதிகளில் 4 பேரை இஸ்ரேல் சிறப்புப் படையினர் நேற்று மீட்டனர். காசா பகுதியில் உள்ள நுசைரத் முகாமில் கடத்தப்பட்ட பிணைக்கைதிகளை இஸ்ரேலிய சிறப்புப் படைகள் மீட்டன. மீட்பு நடவடிக்கையின் போது இஸ்ரேலிய சிறப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
அதே நேரத்தில், இஸ்ரேலியப் படைகள் இந்த நடவடிக்கையின் போது நுசைரத் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. தரை மற்றும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!