இஸ்ரேல் நடத்திய தாக்குதல்.. ஹமாஸ் ராணுவ தளபதி படுகொலை!

 
முகமது தைப் அலி

காஸா பகுதியில் இயங்கி வரும் ஹமாஸ் ஆயுதக் குழு கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக்கைதிகளாக காசாவுக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது. இதையடுத்து, வரமாஸ் ஆயுதக் குழு மீது இஸ்ரேல் போரை அறிவித்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை மீட்டது. மேலும், காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்மாயில் ஹனியே

இந்தப் போரில் காஸாவில் ஹமாஸ் ஆயுதக் குழு உட்பட 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இதேவேளை, ஹமாஸ் ஆயுதக் குழுவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே (வயது 62) நேற்று கொல்லப்பட்டார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் இஸ்மாயில் படுகொலை செய்யப்பட்ட பிறகு, அவரது படுகொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவதாக ஈரான் கூறியது.

இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தைப் அலி உயிரிழந்ததாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்று கூறப்படுகிறது. ஜூலை 13 அன்று, தெற்கு காசாவில் முகமது தைப் வாழ்ந்த கான் யூனிஸ் பகுதியை இஸ்ரேலிய இராணுவம் தாக்கியது. அந்த தாக்குதலில் முகமது தைப் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் இறந்த செய்தியை தற்போது இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!