நிதியாண்டில் 9 ராக்கெட்கள் ஏவ திட்டம்... இஸ்ரோ தலைவர் நாராயணன் முக்கிய தகவல்!

 
இஸ்ரோ


 
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன். 9 முக்கிய ராக்கெட்களை விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிட்டு வருவதாக அறிவித்துள்ளார். பன்னாட்டு விமான நிலையத்தில்   இஸ்ரோவின் வரவிருக்கும் திட்டங்கள் மற்றும் முக்கிய செயற்கைக்கோள் ஏவுதல்கள் குறித்து விரிவாகப் பேசியுள்ளனர்.  இது குறித்து நாராயணன் “நிதியாண்டில் 9 முக்கிய ராக்கெட்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.  புவி கண்காணிப்பு, தொலைத்தொடர்பு, மற்றும் அறிவியல் ஆய்வு செயற்கைக்கோள்கள் அடங்கும். இதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் தீவிர பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஏவுதல்கள் இந்தியாவின் விண்வெளி ஆய்வு திறனை மேலும் வலுப்படுத்தும்.” என தெரிவித்துள்ளார்.  

இஸ்ரோ
இது குறித்து  ” இஸ்ரோ மற்றும் நாசாவின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட ‘ப்ளூபேர்டு பிளாக்-2’ செயற்கைக்கோள், அடுத்த சில வாரங்களில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட இருப்பதாக நாராயணன் தெரிவித்துள்ளார்.  “இந்த செயற்கைக்கோள், புவி கண்காணிப்பு மற்றும் காலநிலை மாற்ற ஆய்வுகளில் புதிய புரட்சியை ஏற்படுத்தும்.  
இந்தியாவின் முதல் மனித விண்வெளி பயணம் ககன்யான் திட்டம்  நாராயணன், “2027-ல் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்புவதற்கு முன்  3 ஆளில்லா விண்கலங்களை சோதனை செய்ய வேண்டும். இந்த ஆண்டு டிசம்பரில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செலுத்தப்படும். ‘வியோம்மித்ரா’ என்ற பெண் உருவ ரோபோ அனுப்பப்படும்,

இஸ்ரோ

இது மனிதர்களின் உடல் செயல்பாடுகளை பிரதிபலிக்கவும், விண்கலத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகளை சோதிக்கவும் உதவும்,” என தெரிவித்துள்ளார்.   சந்திரயான்-5 திட்டம் ஜப்பானுடன் இணைந்து 2028-ல் 100 நாட்கள் நிலவு ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருப்பதாகவும்  நாராயணன் குறிப்பிட்டுள்ளார்.  “தற்போது 55 செயற்கைக்கோள்கள் விண்ணில் செயல்படுகின்றன. அடுத்த நான்கு ஆண்டுகளில் இதை மூன்று மடங்காக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன,” என தெரிவித்துள்ளார்.  
நாராயணன் இது குறித்து  கூறுகையில், “இஸ்ரோவின் சமீபத்திய தோல்வி குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.  இந்திய விண்வெளி ஆய்வு, தோல்விகளில் இருந்து கற்று முன்னேறுவதற்கு உறுதியாக உள்ளது.” இந்தியாவின் விண்வெளி துறையை வளர்ச்சியடைந்த நாடுகளின் அளவுக்கு உயர்த்துவதற்கு தனது குழு முழு முயற்சியுடன் செயல்படும் என உறுதி அளித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?