செம மாஸ்... கடலுக்கடியில் வரைபடம்; ராமர் சேது பால ரகசியங்களை கண்டுபிடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்!

 
ராம் சேது பாலம்

 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ ராமர் சேது பாலத்தில்  நீரில் மூழ்கிய கட்டமைப்பை வெற்றிகரமாக வரைபடமாக்கி வெளியிட்டுள்ளது. இந்த   ராம்சேது  என்று அழைக்கப்படுகிறது. இந்த பாலம் மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பழமையான பாலமாக வரையறுக்கப்பட்டுள்ளது.இஸ்ரோ  ஆராய்ச்சியாளர்கள் ICESat-2 தரவை அக்டோபர் 2018 முதல் அக்டோபர் 2023 வரை பயன்படுத்தி, 10 மீட்டர் தெளிவுத்திறன் வரைபடத்தை உருவாக்கியுள்ளனர். இந்த வரைடம்  ரயில் பெட்டியின் அளவைப் போல தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த வரைபடம்  நீருக்கடியில் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரையிலான பாலத்தின் தொடர்ச்சியை காட்டுகிறது. அதில் 99.98 சதவீதம் ஆழமற்ற நீரில் மூழ்கிக்கிடப்பதாக தெரிவித்துள்ளது.   

ராமர் பாலம்
சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இஸ்ரோ விஞ்ஞானிகள் அமெரிக்க செயற்கைக்கோளில் இருந்து மேம்பட்ட லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீரில் மூழ்கிய மலையின் முழு நீளத்தின் உயர்-தெளிவு வரைபடத்தை உருவாக்கினர். 
கிரிபாபு தண்டபத்துலா தலைமையிலான ஆய்வுக் குழு, மன்னார் வளைகுடா மற்றும் பால்க் ஜலசந்திக்கு இடையே நீரைப் பாய அனுமதிக்கும் 11 குறுகலான கால்வாய்களைக் கண்டறிந்து, கடல் அலைகளிலிருந்து கட்டமைப்பைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.  இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே ஒரு காலத்தில் நில இணைப்பாக இருந்த இந்த ராம்சேது பாலத்தின் தோற்றத்தை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. கண்டுபிடிப்புகள் பிராந்தியத்தின் வரலாறு மற்றும் இந்த பண்டைய கட்டமைப்பின் உருவாக்கம் பற்றிய புதிய நுண்ணறிவுகளை வழங்குகின்றன.
நீரில் மூழ்கிய கட்டிடத்திற்கு கிழக்கிந்திய கம்பெனி வரைபட வல்லுநர் ஆடம்ஸ் பாலம் எனப் பெயரிட்டுள்ளது.  ராமர் சேது என இந்தியர்களால் வர்ணிக்கப்படும் அமைப்பு ராமாயணத்தில் இராவணனின் ராஜ்ஜியமான இலங்கையை அடைய, அவரது மனைவி சீதையை மீட்பதற்காக ராமரின் படையால் கட்டப்பட்ட பாலமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 இஸ்ரோ
 9ம்  நூற்றாண்டில் பாரசீக கடற்படையினர் இந்த பாலத்தை சேது பந்தாய் அல்லது கடலின் மேல் உள்ள பாலம் எனக் குறிப்பிட்டனர் . 1480ம் ஆண்டு  சக்திவாய்ந்த புயலால் தாக்கப்படும் வரை இந்தப்  பாலம் கடல் மட்டத்திற்கு மேல் இருந்ததாக ராமேஸ்வரத்தில்  கோவில் பதிவுகள் குறிப்பிடுகின்றன.
செயற்கைக்கோள் கண்காணிப்புகள் கடலுக்கடியில் கட்டுமானத்தை சுட்டிக்காட்டின. ஆனால் இஸ்ரோவின் கணிப்புக்கள் பாலத்தின் வெளிப்படையான பகுதிகள் கடலின் ஆழமற்ற பகுதிகளில் மூழ்கிக்கிடப்பதாக காட்டுகின்றன. அதாவது கடல் நீரில்  ஒரு மீட்டர் முதல் பத்து மீட்டர் வரை ஆழமான பகுதிளில் இந்தப் பாலம் இருப்பதாக  கப்பல் மேப்பிங் காட்டுகிறது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web