2 வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு!! பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

 
செந்தில் பாலாஜி

மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நேற்று காலை தொடங்கிய வருமான வரித்துறை சோதனை, இரவு முழுவதும் நீடித்து இன்று 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் வீட்டில்  நடைபெற்ற  சோதனை நிறைவடைந்துள்ளது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில்  ஒரு லேப்டாப், ஒரு ஐபேட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . அத்துடன் வீட்டில் ரூ.30,000 வைக்கப்பட்டிருந்த லாக்கருக்கு  அதிகாரிகள் சீல் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நேற்று அதிகாலை முதலே தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்  . தொண்டர்கள் குவிந்ததில் அடி தடி சண்டைகள் உருவானது. இதனால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். அந்த பகுதி முழுவதும்பெரும் பரபரப்புக்குள்ளானது.

அவசர சிகிச்சை பிரிவு

சென்னை ,கரூர் , பெங்களூரு , ஹைதராபாத்  நகரங்களில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான  இடங்களில் சோதனை நடைபெற்ற வரும் நிலையில் அவருக்கு  ஆதரவாக திமுக தொண்டர்கள் குவிந்தனர். இந்நிலையில் கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடைபெறும் இடத்தில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பாதுகாப்பு காரணங்களுக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

செந்தில் பாலாஜி

8 வாகனங்களில் வந்திருந்த அதிகாரிகள் கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்லையில், திமுகவினர் தாக்கியதாக வருமான வரித்துறை அதிகாரி காயத்ரி உட்பட  4 அதிகாரிகள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web