அமைச்சர் எ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் உட்பட தமிழகத்தில் 80 இடங்களில் ஐ.டி அதிரடி ரெய்டு!

 
அமைச்சர் எ.வ.வேலு உறுதி

இன்று காலையிலேயே தமிழகம் முழுவதும் ஐ.டி. ரெய்டு நடைப்பெற்று வருகிறது. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழகம் முழுவதும் சோதனை நடைப்பெற்று வருகிறது. அமைச்சர் வேலுவுக்கு சொந்தமான இடங்கள், கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்கள் என 80க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள எ.வ.வேலுவுக்குச் சொந்தமான அருணை பொறியியல் கல்லூரி, சென்னையில் அண்ணாநகர், அடையாறு, புரசைவாக்கம், வேப்பேரி, தி.நகர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 80- க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

கடந்த சில நாட்களாக மணல் குவாரி தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். முறையாக மணல் குவாரி அனுமதி வழங்காமல் அளவுக்கு அதிகமான மணல் எடுப்பதாக இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்பு உடைய இடங்கள் மற்றும் பிரபல கட்டுமான நிறுவன தொடர்புடைய இடங்களில் இன்று காலை துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை உதவியுடன் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வருமான வரித்துறை

கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாக எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி 25 கோடி ரூபாய் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணல் குவாரி அதிபர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு பல முக்கிய ஆவணங்கள் மற்றும் போலி ரசீதை காட்டி முறைகேட்டில் ஈடுபட்டு சட்டவிரோதமாக மணல் அள்ளியது தெரியவந்தது.

இந்த ஆவணங்களை அடிப்படையாக வைத்து பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் பொதுப்பணித்துறையில் டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு மணல் வாங்கிய கட்டுமான நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவன அதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த சோதனை முடிந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்,சொத்து மதிப்பு உள்ளிட்ட தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web