அட கொடுமையே.. அப்பா- அம்மா வாக்குவாதத்தை சமாதானம் செய்ய முயன்ற மகனுக்கு கத்திக்குத்து!

 
ஆதித்தியா

டெல்லியின் ஐபி எக்ஸ்டென்ஷன் பகுதியில் அசோக் சிங் (64) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அசோக் சிங் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார்.

பணி ஓய்வு பெற்ற இவருக்கு மனைவியும், ஆதித்தியா சிங் (23) வயது மகனும் உள்ளனர். ஆதித்தியா குருகிராம் பகுதியில் கம்ப்யூடர் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தந்தை அசோக் சிங் குருகிராம் பகுதியில் புதிதாக பிளாட் ஒன்றை வாங்கியுள்ளார். அப்போது அந்த பிளாட்டை விற்பனை செய்தவர்கள் மொபைல் ஆப் மூலம்  பணம் அனுப்பும்படி கூறியுள்ளனர்.

ஆதித்தியா

வீட்டிற்கு வந்த அசோக் சிங் மொபைல் ஆப் மூலம் பணம் செலுத்த முயன்றுள்ளார். அது தோல்வியில் முடிந்ததால், தனது மனைவியிடம் ஆப்பை டவுன்லோட் செய்து பணத்தை அனுப்பும்படி கூறியுள்ளார். ஆனால், அப்ளிகேஷன் டவுன்லோட் ஆகி பேமென்ட் செய்ய தாமதமாகியுள்ளது. 

பணத்தை செலுத்த தாமதமாகியதாக மனைவி மீது அசோக் சிங் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சிறிது நேரத்தில் அவர்களுக்குள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அப்போது விட்டில் இருந்த ஆதித்தியா , அப்பா- அம்மா இடையேயான வாக்குவாதத்தை சமாதானம் செய்ய முயன்றார்.
அப்போது அசோக் மற்றும் மகன் ஆதித்தியாவுக்கு இடையே சண்டை திரும்பியது. இதில் கோபமடைந்த அசோக் சிங், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது மகனை இரு முறை குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஆதித்தயா உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

ஆதித்தியா

இந்த சம்பவம் தொடர்பாக அசோக்கின் மனைவியே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அசோக்கை கைது செய்து அழைத்து சென்றது. இதனிடையே, கத்திக்குத்தில் காயமடைந்த ஆதித்யா ஆபத்தான நிலையை தாண்டியதாகவும், தற்போது நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 

From around the web