சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமீன்....!!

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு.இவரது ஆட்சி காலத்தில் சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த போது 317 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டதாக கூறி சந்திரபாபு நாயுடுவை ஆந்திர போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இது குறித்து சந்திரபாபு நாயுடு தம் மீது சுமத்தப்பட்ட இந்த ஊழல் வழக்கில் உண்மையில்லை எனவும் இதனை உடனடியாக ரத்து செய்ய கோரியும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
அவருடைய உடல்நிலையை கருத்தில் கொண்டு இன்று நடத்தப்பட்ட விசாரணையின் படி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதனை ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. திறன்மேம்பாட்டு திட்ட ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அவருக்கு, மருத்துவ காரணங்களின் அடிப்படையில் 4 வார காலம் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதாக தெரிவித்தது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!