ஜியோ ஐபிஓ வரப்போகுது... ரிலையன்ஸ் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் முகேஷ் அம்பானி தகவல்!
ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், 2026ம் ஆண்டின் முதல் அரையிறுதிக்குள் ஜியோ ஐபிஓ தாக்கல் செய்ய ஏற்பாடுகளைச் செய்து வருவதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
'அனைத்து முதலீட்டாளர்களுக்கும் இது மிகவும் கவர்ச்சிகரமான வாய்ப்பாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்' என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் 48வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் (AGM) RIL தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி பங்குதாரர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,ஜியோ தனது ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டிற்கு (IPO) தாக்கல் செய்யத் தயாராகி வருவதாகவும், 2026ம் ஆண்டின் முதல் பாதியில் பட்டியலிடப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அறிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், "இன்று ஜியோ தனது ஐபிஓ-விற்கு தாக்கல் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என்பதை அறிவிப்பதில் எனக்கு பெருமையாக உள்ளது. தேவையான அனைத்து ஒப்புதல்களுக்கும் உட்பட்டு, 2026ம் ஆண்டின் முதல் பாதியில் ஜியோவை பட்டியலிட இலக்கு வைத்துள்ளோம்," என்றார்.
ஜியோ குடும்பம் 500 மில்லியன் வாடிக்கையாளர்களைத் தாண்டியது என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இலவச குரல் அழைப்புகள் முதல் AI புரட்சிக்கு உதவுவது வரை, முகேஷ் அம்பானி ஜியோவின் முதல் 5 சாதனைகளை பட்டியலிட்டார்.
அதே போன்று முகேஷ் அம்பானி புதிய துணை நிறுவனமான 'ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்', கூகிள் & மெட்டாவுடன் AI கூட்டணிகளை அறிவித்தார்.
ஜியோவின் வருவாய் ரூ.1,28,218 கோடியாக ($15.0 பில்லியன்), நிதியாண்டு-25ல் 17% ஆண்டு வளர்ச்சி; மற்றும் EBITDA ரூ.64,170 கோடி ($7.5 பில்லியன்) ஆகும். இந்த புள்ளிவிவரங்கள் ஜியோ ஏற்கனவே உருவாக்கியுள்ள மகத்தான மதிப்பிற்கு சான்றாகும், மேலும் அது இன்னும் பெரிய மதிப்பை உருவாக்க விதிக்கப்பட்டுள்ளது என்றார்.

"உலகளாவிய நிறுவனங்களைப் போலவே ஜியோவும் அதே அளவிலான மதிப்பை உருவாக்கும் திறன் கொண்டது என்பதை இது நிரூபிக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இது அனைத்து முதலீட்டாளர்களுக்கும் மிகவும் கவர்ச்சிகரமான வாய்ப்பாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்றார் அம்பானி.
"இன்று, ஜியோ குடும்பம் 500 மில்லியன் வாடிக்கையாளர்களைத் தாண்டியுள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். 500 மில்லியன் மைல்கல் என்பது உங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் ஆதரவின் அடையாளமாகும். உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று ரிலையன்ஸ் சிஎம்டி கூறினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
