ஜூன் 15ம் தேதி நீட் தேர்வு முடிவுகள்?!
இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்புக்களை படிக்க அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது.
அந்த வகையில் நடப்பாண்டுக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு இத்தேர்வை இந்தியா முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தை பொறுத்தவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 15ம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூரில் உருவான கலவரம் காரணமாக அந்த மாநிலத்தில் மட்டும் தேர்வு தள்ளி வைக்கப்பட்டது . இதனால் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!