காஞ்சிபுரம், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்... தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பெரம்பலூர் கலெக்டராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நிர்வாக காரணங்களுக்காக தமிழக அரசு அவ்வப்போது ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகின்றது. மேலும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மாநில அரசில் பணியாற்று வரும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக பணிய வரும் அருண் ராஜ், சர்க்கரை துறை கூடுதல் இயக்குநராக நியமிக்க்ட்ப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் சார் ஆட்சியராக பணியாற்றி வந்த மிருணாளினி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
