அதிர்ச்சி... ரூ.2 கோடி கேட்டு மாணவன் கடத்தல்; 3 பேரை சுற்றி வளைத்த போலீசார்!

 
மாணவன் கடத்தல்
 மதுரையில் ரூ. 2 கோடி கேட்டு பள்ளி மாணவரை கடத்திச் சென்ற கும்பலைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை எஸ்எஸ்.காலனி விவேகானந்தர் தெருவில் வசித்து வருபவர் ராஜலட்சுமி. இவரது கணவர் உயிரிழந்து விட்ட நிலையில், இவரது 14 வயது மகன் தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். 
இந்நிலையில், வழக்கம் போல் ஆட்டோவில் வீட்டிலிருந்து பள்ளிக்கு நேற்று முன்தினம் சென்ற மாணவரை நடுவழியே ஆம்னி வேனில் வந்த 4 பேர், ஆட்டோவை வழிமறித்து, ஓட்டுநருடன் மாணவனையும் கடத்தி சென்றனர்.

மாணவன் கடத்தல்

அதன்பின்னர், ஆட்டோ ஓட்டுநரின் செல்போனில் ராஜலட்சுமிக்கு போன் செய்து, ரூ.2 கோடி பணத்துடன் குறிப்பிட்ட இடத்திற்கு வரவேண்டும் எனவும் இல்லையெனில் மாணவரை கொலை செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர். 
இது குறித்து பதற்றமடைந்த மாணவனின் தாயார், எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு தனது மகன் கடத்தப்பட்ட விவரம் குறித்தும், தன்னிடம் ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டல் தொலைபேசி வந்தது குறித்தும் தகவல் தெரிவித்தார். காவல் ஆய்வாளர் காசி தலைமையில் போலீசார் உடனடியாக தீவிர விசாரணையில், ஆய்விலும் ஈடுபட்டு மாணவன் இருக்குமிடத்தை நெருங்கினர்.

மாணவன் கடத்தல்
போலீசார் தங்களைச் சுற்றி வளைப்பதைத் தெரிந்துக் கொண்ட கடத்தல் கும்பல், மதுரை செக்கானூரணி அருகே கிண்ணிமங்கலம் என்ற பகுதியில் மாணவர் மற்றும் ஆட்டோ ஓட்டுநரை இறக்கி விட்டு தப்பினர். அங்கு சென்ற போலீஸார் இருவரையும் பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வந்தனர். இது தொடர்பாக ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தென்காசியை சேர்ந்த வீரமணி, காளிராஜ், நெல்லையை சேர்ந்த அப்துல் காதர் ஆகிய மேலும் 3 பேரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!