இன்று தமிழகம் முழுவதும் 113 கோவில்களில் குடமுழுக்கு விழா தொடங்கியது... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

இன்று ஜூலை 7ம் தேதி தமிழகம் முழுவதும் 31 மாவட்டங்களில், 113 கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 176 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து இன்று காலை 31 மாவட்டங்களில் 113 கோவில்களில் கும்பாபிஷேகம் நடக்க இருக்கிறது.
இன்று நடக்கும் கும்பாபிஷேகத்தில் 3,207வது கோவிலாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இது தவிர, கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை இசக்கியம்மன் கோவில், மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேசுவர சாமி கோவில், காஞ்சீபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை முருகன் கோவில், தென்காசி மாவட்டம் கடையம் நித்திய கல்யாணி அம்மன் கோவில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சின்னமலை யோக ஆஞ்சநேய சாமி கோவில் உள்பட 113 கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்து வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!