தேர்தல் திருவிழா... மூவர்ணத்தில் ஒளிர்ந்த குதுப்மினார்... வைரலாகும் வீடியோ!
மக்களவைத் தேர்தல் திருவிழா கொண்டாட்டத்தையும், வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் குதுப்மினாரை மின் விளக்குகளால் இந்திய தேர்தல் ஆணையம் மூவர்ண கொடியில் மின்விளக்குகளால் ஒளிர செய்துள்ளது. மூவர்ணங்களில் ஒளிரும் குதுப்பினாரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Qutub Minar radiates the spirit of Jash-e-Matdan with its dazzling display of the #ChunavKaParv theme.
— Election Commission of India (@ECISVEEP) April 27, 2024
Let's celebrate this festivity by casting our votes #GeneralElections2024
📹 @ceodelhi #DeshKaGarv #LokSabhaElections2024 #YouAreTheOne pic.twitter.com/NPhlifadmT
இந்தியாவில் ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது இரண்ட கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளன.
இந்நிலையில் தேர்தல் திருவிழாவை கொண்டாடும் வகையில் டெல்லியில் உள்ள வரலாற்று நினைவுச் சின்னமான குதுப் மினாரில் தேர்தல் கருப்பொருளின் அம்சங்கள் ஒளிபடமாக பிரதிபலிக்கப்பட்டன.
இந்தியாவின் வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமான குதுப் மினார் இரவில் தேர்தல் கொண்டாட்டத்தை பறைசாற்றியது காண்பவர்களை வெகுவாக கவர்ந்தது. தேர்தல் மற்றும் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மின் விளக்குகள், சுவரொட்டிகள் மற்றும் காட்சிகளை இது பிரகாசித்தது
குதுப்மினார் ஒளிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தேர்தல் ஆணையம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு, மக்களிடையே வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
அந்த பதிவில் "குதுப்மினார் தேர்தல் கருப்பொருளுடன் அதனை கொண்டாடும் உணர்வை வெளிப்படுத்துகிறது.” என குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!