லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்... இன்று பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை!

 
பூரி ஜெகநாதர் ரத யாத்திரை! இவர்களுக்கு அனுமதி கிடையாது!

இன்று உலக பிரசித்தி பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை துவங்குகிறது. இதன் பொருட்டு லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் அழகிய கடற்கரை நகரமான பூரியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயம். 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்  ரத யாத்திரை மிக பிரம்மாண்டமாக நடைபெறும். இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.  

இந்த கோவிலில் மூலவர்களாக பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகந்நாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் அமைந்துள்ளது. இங்கு  ரத யாத்திரைக்காக ஒவ்வொரு ஆண்டும் 3 மூலவர்களுக்கும் புதிய தேர் செய்யப்படும். அந்த தேர்களில் மூலவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். ஜெகந்நாதருக்கு 45 அடி உயர நந்திகோஷம், பாலபத்திரருக்கு 44 அடி உயர தலத்வாஜா, சுபத்ராவுக்கு 43 அடி உயர தர்பதலனா ஆகிய 3 பிரம்மாண்டமான தேர்கள் உருவாக்கப்படும். 

பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை
16 சக்கரங்களை கொண்ட தேரில் ஜெகந்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட தேரில் பாலபத்திரரும், 12 சக்கரங்களை கொண்ட  தேரில் சுபத்ராவும் எழுந்தருள்வர்.  பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேர்களை இழுத்துச் செல்வார்கள். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகநாதர், பாலபத்திரர், சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ. தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோவிலான மவுசிமா கோவிலுக்கு சென்று ஓய்வு எடுப்பார்கள்.  

அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோவிலை சென்றடைந்ததும் ஜெகந்நாதர் ஓய்வெடுப்பார். திருவிழாவின் 4 நாளில் தனது கணவர் ஜெகந்நாதரை காண லட்சுமி தேவி, குந்திச்சா கோவிலுக்கு வருகை தருவார். அதை தொடர்ந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு பின்னர் ஜெகந்நாதர் கோவிலை வந்தடைந்ததும் விழா நிறைவு பெறும். இந்த விழா தொடர்ந்து  9 நாட்கள் நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டுக்கான ரத யாத்திரை இன்று ஜூலை 27ம் தேதி வெள்ளிக்கிழமை காலை தொடங்குகிறது. இதற்காக தேர்கள் வண்ணமயமாக உருவாக்கப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரை

பூரி நகரின் மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களும் அசைந்து செல்லும் காட்சியை காண லட்சக்கணக்கான மக்கள் பூரியில் குவிந்துள்ளனர். .பாதுகாப்பு படையினர் 10000 பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.  கடற்கரை பகுதிகளில் மாநில கடலோர காவல் படை, கடற்படை குழுக்களுடன் முழு அளவில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். ட்ரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு பணி நடைபெறும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது