காஷ்மீரில் கனமழையால் நிலச்சரிவு... குமரியில் இருந்து இன்று புறப்படும் ரயில் ரத்து!
ஜம்மு - காஷ்மீரில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குமரியில் இருந்து இன்று புறப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் சேவையை வடக்கு ரயில்வே மாற்றியமைக்க கூறியுள்ளது.

இன்று மதியம் 2.15 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கட்ராவுக்கு இயக்கப்படும் வாராந்திர ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16317) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதே போன்று ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கட்ராவில் இருந்து சென்னை சென்டிரலுக்கு இன்று இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயில் (16032) ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கட்ரா - நிஜாமுதீன் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் நாளை மதியம் 2 மணிக்கு நிஜாமுதீனில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி புறப்படும்.

நாளை இரவு 10.30 மணிக்கு ஸ்ரீ மாதா வைஷ்ணவ் தேவி கட்ராவில் இருந்து சென்னை சென்டிரலுக்கு இயக்கப்படும் அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயிலும் (16032) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
