பீர் குடித்தபடியே வழக்கில் வாதாடிய வழக்கறிஞர்... ஆன்லைன் பரிதாபங்கள்!

ஆன்லைனில், பீர் குடித்தபடியே வக்கீல் ஒருவர் வாதாடிய வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைராகி, கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது.
Gujarat High Court initiates contempt case against Senior Advocate for sipping beer during virtual hearinghttps://t.co/WznhyXsxvE
— Bar and Bench (@barandbench) July 1, 2025
குஜராத் மாநிலத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஒன்று ஆன்லைன் மூலம் நடந்து கொண்டிருந்தது. குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏ.எஸ். சுபேஹியா மற்றும் ஆர்.டி. வச்சானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடந்த இந்த விசாரணையில், மூத்த வழக்கறிஞரான பாஸ்கர் தன்னா என்பவர் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டார்.
ஆனால் விசாரணையில் தன்னா, ஒரு கையில் பீர் கோப்பையை வைத்து கொண்டும், அதனை மெதுவாக குடித்து கொண்டே இருந்தார். மற்றொரு கையில் தொலைபேசி வைத்து பேசிக் கொண்டிருந்தார். இச்சம்பவம் நீதிபதிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!