குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த சிறுத்தை சிக்கியது... மக்கள் நிம்மதி!

 
குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த சிறுத்தை சிக்கியது... மக்கள் நிம்மதி!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் நான்கு நாட்களாக மக்களை அச்சுறுத்திய சிறுத்தை இரும்புக் கூண்டிற்குள் இன்று சிக்கியது. 

நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம் தேவர் சோலையை அடுத்த தேவன் எஸ்டேட் மற்றும் சுற்றுப்புற குடியிருப்பு பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக சிறுத்தை ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இந்த நிலையில், பொன்வயல் கிராமத்தில், கடந்த 4-ம் தேதி சுனில் என்பவர் வீட்டின் அருகே சிறுத்தை பதுங்கியிருந்ததை பொதுமக்கள் பார்த்தனர். இதனையடுத்து உடனடியாக அவர்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த சிறுத்தை சிக்கியது... மக்கள் நிம்மதி!

இதையடுத்து, சிறுத்தை நடமாட்டம் உள்ள பொன்வயல், பாலம்வயல் உட்பட்ட பகுதிகளில், வன ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் கவச உடைய அணிந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தேயிலை, காபித் தோட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.  சிறுத்தையின் உடலில் காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது வயது முதிர்வு காரணமாக அது பதுங்கியிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து மனிதர்களைத் தாக்கும் முன்பாக, அந்த சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். கூண்டில் சிக்காதபட்சத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கவும் முடிவு செய்தனர். ஆனால் சிறுத்தை, தேவன் இரண்டு பகுதியில் தேயிலைத் தோட்டத்துக்குள் பதுங்கியது. 

குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த சிறுத்தை சிக்கியது... மக்கள் நிம்மதி!

இதைத் தொடர்ந்து இரும்புக் கூண்டுகள் மற்றும் தானியங்கி கேமராக்களைப் பொருத்தி வனத்துறையினர் அந்த சிறுத்தையைக் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலையில் வனத்துறையினர் வைத்திருந்த இரும்புக் கூண்டுக்குள் சிறுத்தை சிக்கியது. 

இதைத் தொடர்ந்து வனத்துறையினர் முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட மருத்துவக்குழுவினருடன் விரைந்து சென்று சிறுத்தையை முதுமலைக்கு கொண்டு சென்றனர்.  கடந்த  நான்கு நாட்களாக அச்சுறுத்திய சிறுத்தை பிடிபட்டதால் கூடலூர் சுற்றுவட்டார கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web