கேரளாவில் இருந்து காய்கறி கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல்... 2 பேர் கைது!
கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு காய்கறி கழிவுகளை லாரியில் ஏற்றி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கேரளாவில் இருந்து வாகனங்களில் கொண்டு வரப்படும் இறைச்சி கழிவுகள் குமரியில் கொட்டப்படும் சம்பவம் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதுதொடர்பாக போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாலும் இந்த சம்பவம் குறைந்தபாடில்லை.
இதற்கிடையே சமீபத்தில் கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகள் கொண்டு வரப்பட்டு நெல்லையில் கொட்டப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பிரச்சினையாக மாறியது. பின்னர் இந்த மருத்துவக்கழிவுகளை கேரளாவில் இருந்து வந்த அதிகாரிகள் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக கேரள அரசுக்கு ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரளாவில் இருந்து குமரியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படும் சம்பவம் நடந்து வருகிறது. இவ்வாறு கழிவுகளை கொட்ட வருபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் இருந்து கொல்லங்கோடு வழியாக குமரி மாவட்டத்திற்குள் காய்கறி கழிவுகளை ஏற்றிக் கொண்டு லாரி வந்தது. நித்திரவிளை அருகே தெருவுமுக்கு பகுதியில் வந்த போது அங்கு சோதனையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீசாரிடம் காய்கறி கழிவுகள் ஏற்றி வந்த லாரி சிக்கியது.
பின்னர் போலீசார் லாரியை ஓட்டி வந்த பணகுடி பகுதியை சேர்ந்த சிவா (29), கிளீனர் மணிகண்டன் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் லாரி உரிமையாளரான வள்ளியூரை சேர்ந்த ஜோஸ்வா (35) என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதே சமயத்தில் காய்கறி கழிவுகளை கேரளாவில் இருந்து ஏற்றி அனுப்பிய நபர் யார்? எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!