“இதுக்கா பெத்து வளர்த்தோம்...” காதலனுடன் திருமணம்.. புதுமணப்பெண் மர்ம மரணம்.. கதறிய பெற்றோர்!

 
மீனா

‘இதுக்காகவே கஷ்டப்பட்டு பெத்து, அத்தனைப் பாசத்தைக் கொட்டி வளர்த்தோம்.. காதலித்தவனையே கல்யாணமும் பண்ணி வெச்சோமே” என்று பெற்றோர் கதறிய அழுதது அங்கிருந்தவர்களின் கண்களையும் குளமாக்கியது. காதலித்தவனையே திருமணம் செய்து கொண்ட நிலையில், ரெண்டே மாதத்தில் புதுமணப்பெண் உயிரிழந்தது உறவினர்களையும், நண்பர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஈரோடு மாவட்டம், கணபதிபாளையத்திற்கு அருகே பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்ட பெண், திருமணமான இரண்டே மாதத்தில் தற்கொலை செய்து கொண்டதால், மரணத்தில் சந்தேகமடைந்த பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் கொடுத்தனர்.

ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் நால்ரோடு பகுதியில் சித்ராதேவி தனது மகள்கள் நர்மதா, மீனாவுடன் வசித்து வருகிறார். கணவர் இறந்த பிறகு, சித்ராதேவி ஒரு மளிகைக் கடையில் வேலை செய்து தனது இரண்டு மகள்களையும் வளர்த்து வந்தார். இந்நிலையில், கணபதிபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தங்களது மகள் மீனா அனுமதிக்கப்பட்டதாக மீனாவின் தாய் சித்ராதேவிக்கு மீனாவின் மாமியார் குடும்பத்தினர் தகவல் தெரிவித்தனர்.

மீனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். அதன்பின், சித்ராதேவி மருத்துவமனைக்கு சென்றார். ஆனால், “மீனாவை பரிசோதித்த டாக்டர்கள், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தியதால், அங்கு அழைத்துச் சென்றோம்” என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சித்ராதேவி சென்ற போது, மீனாவை பரிசோதித்த போது, மீனா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்ததாக கூறியுள்ளனர்.

சம்பவத்தன்று யுவராஜ்-மீனா தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஆத்திரமடைந்த மீனா வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், மீனா தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று மீனாவின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இந்நிலையில் மீனா உயிரிழந்த பின்பும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கூறிய பின்பும் யுவராஜிடம் போலீசார் விசாரணை நடத்தாததால், மீனா தற்கொலை செய்து கொண்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உயிரிழந்த மீனாவின் உறவினர்கள், நண்பர்கள் முறையிட்டனர்.

அதிலும் மீனாவின் அக்கா, "என் தங்கையை ஒரு வாரம் சித்ரவதை செய்தார்கள். அதற்கு முன்பும் அவள் என்னிடம் சொல்லி அழுது கொண்டிருந்தாள். எந்த பிரச்சனையும் சரி செய்யப்படும் என்று நான் சொன்னேன். கடைசியில் அவளை இந்த முடிவுக்கு தள்ளினார்கள். . அவர்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்று சொல்லுங்கள், அவர்கள் மீது ஒரு எஃப்ஐஆர் கூட பதிவு செய்யவில்லை என கூறினார் .

இது குறித்து மீனாவின் உறவினர் ஒருவர் கூறும்போது, “எங்கள் இரு குடும்பங்களும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவை. திருமணம் ஆனவுடன் ஒருவரையொருவர் நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்றார்கள். நாங்கள், 'இது சரி வராது; கிராமம் முழுக்க சாதி வெறி என்று சொல்லிக் கொண்டிருந்தோம். 'இல்லை, எங்கள் வீட்டு பெண் போல் பார்த்துக் கொள்கிறோம் என்றனர். இப்போது இப்படி ஆயிடுச்சு. இவர்களது வீட்டிலிருந்து மருத்துவமனைக்குக் கூட ஒருத்தர் கூட வரலை.  

எங்கள் குழந்தையை கொல்ல வந்துள்ளனர். எங்கள் குழந்தையை என்ன செய்கிறீர்கள் என்று கேட்டோம். அதற்கு, டி.எஸ்.பி., கோகுல கிருஷ்ணன், 'உங்கள் குழந்தை வேண்டுமானால், எடுத்துச் செல்லுங்கள், இல்லையென்றால் தூக்கி எறியுங்கள். உங்களுக்காக வழக்கு போட முடியாது என்கிறார்கள். காரணம் கேட்டதால் இப்படி சொல்கிறீர்கள். மீடியாவைக் கூப்பிடுவோம் என்று சொன்னதும் எல்லாரும் கிளம்பிச் சென்றனர். ஒரு போலீஸ்காரர் கூட எங்களுக்காகப் பேசவில்லை. எங்கள் குழந்தை எப்படி இறந்தது என்று கேட்டோம். யாரும் தெளிவாக எதும் சொல்ல மாட்றாங்க என ஆவேசமாக செய்தியாளர்களிடம் பேசினர்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், ''வருவாய் கமிஷனர் விசாரணை நடத்தும் போது, தனி புகார் வந்தால், விசாரணை நடத்தப்படும்'' என, விளக்கம் அளித்தனர். இதைத் தொடர்ந்து மீனாவின் உறவினர்கள் மீனா தற்கொலைக்கான காரணம் குறித்து முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தக் கோரி புகார் அளித்தனர்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web