நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்!

 
ஷர்மிளா
 

திருச்சி மாவட்டத்தில் முசிறி நீதிமன்றத்தில் தங்களது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு திருமணம் செய்து கொண்ட காதலர்கள் தஞ்சமடைந்தனர். திருச்சி மாவட்டம், முசிறி அருகே பேரூர் கிராமத்தை சேர்ந்தவர் வினித் (22). முசிறி அருகே உள்ள முத்தையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஷர்மிளா (24). இவர்கள் இருவரும் கல்லூரிக்கு செல்லும் போது பேருந்தில் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் நட்பாக பழகி வந்தவர்கள் காதலித்து வந்துள்ளனர். 

திருமணம்
கடந்த இரண்டு வருடமாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணத்திற்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த 28ம் தேதி துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் மாரியம்மன் கோயிலில் வினித்தும், சர்மிளாவும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர், வினித்தின் உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.


இந்நிலையில் துறையூர் நீதிமன்றத்தில் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். நீதிமன்ற நடுவர் இருவரும் காணாமல் போனது குறித்து புகார் பெறப்பட்டுள்ள காவல் நிலையத்தில் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து புதுமண ஜோடிகளை போலீசார் முசிறி குற்றவியல் நடுவர் முன்பாக ஆஜர்படுத்தினர். அப்போது நீதிமன்ற வளாகத்திற்கு பெண்ணின் உறவினர்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!


பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வாணி மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் கதிரேசன் ஆகியோர் புதுமணத் தம்பதிகளை போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் இருந்து முசிறி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று உரிய விசாரணை மேற்கொண்டு பாதுகாப்பு அளித்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web