காதல் கணவன், கர்ப்பிணி மனைவி தூக்கிட்டு தற்கொலை... ஆன்லைன் டிரேங்கால் பெரும் விபரீதம்!

 
சந்தியா

 கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் வசித்து வரும்  கோவிந்தன் மகன் 27 வயது விஜயகுமார். இவருடைய மனைவி 23 வயது  சந்தியா. இதில் சந்தியா சென்னையை சேர்ந்தவர். இருவரும் காதலித்து கலப்பு மணம் செய்து கொண்டவர்கள்.  சந்தியா 9 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் தம்பதியினர் இருவரும் ஓசூர் பேகேப்பள்ளி கணபதி நகர் பகுதியில்  வாடகைக்கு குடியிருந்தனர். சந்தியா கர்ப்பிணியாக இருந்ததால் இவர்களுடன்  சந்தியாவின் தாயார் திலகவதியும் வசித்து வந்தார்.  
விஜயகுமார் ஓசூரில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். ஆன்லைன் டிரேடிங் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.  ஆன்லைன் டிரேடிங் தொழிலில் அவருக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  

சந்தியா

இதனால் கணவன் மனைவி இருவரும் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்து மனவிரக்தியில் இருந்தனர்.   நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் வழக்கம்போல், உணவு அருந்தி விட்டு தங்களது அறையில் உறங்க சென்றனர்.  சந்தியாவின் தாய் திலகவதியும் மற்றொரு அறையில் தூங்கினார்.  காலை நீண்ட நேரம் ஆகியும் விஜயகுமாரும் சந்தியாவும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த திலகவதி, படுக்கையறையில் எட்டிப் பார்த்து குரல் கொடுத்தார்.  அப்போது இருவரும் அறையில் இருந்த மின்விசிறியை கழற்றி கீழே வைத்து விட்டு அங்கிருந்த கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இவரது கதறி அழுதது கேட்டு  அக்கம் பக்கத்தினர்  காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

ஆம்புலன்ஸ்

உடனடியாக  சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்த கணவன் மனைவி இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடன் தொல்லை அதிகமானது. இதனால் கணவன் மனைவி இருவரும்  தற்கொலை செய்து கொண்டதாக  கடிதம் எழுதியிருந்தனர்.  அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் கணவனும், கர்ப்பிணி மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web