காதல் திருமணம்.. மகள் வாழ்க்கையையும் யோசிக்கலையே... கூலிப்படையை ஏவி மருமகனை கொல்ல முயன்ற மாமனார்!

 
ஜானகிராமன்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்த பூசாரி ஜானகிராமன் என்பவர் காளியம்மன் கோவில் அமைத்து அங்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்லி வருகிறார். செங்கம் பகுதியை சேர்ந்த விஜி என்ற இளைஞர் காளியம்மன் கோவிலுக்கு சென்று ஜானகிராமனுடன் நெருங்கி பழகி அவருடன் கோவில் வேலைகளை பார்த்து வந்துள்ளார்.

விஜய்

இந்நிலையில் விஜி என்பவரும் ஜானகிராமன்  மகள் ஜெயஸ்ரீ என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது நாளடைவில் காதலாக மாறி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பதிவு திருமணம் செய்து கொண்டு செங்கம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.காதல் திருமணம் செய்த இருவரும் செங்கம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். காதல் திருமணத்தை ஏற்காத பெண்ணின் தந்தை திருமணமாகி ஐந்து மாதங்களுக்கு பிறகு  கூலி படையை அனுப்பி தனது மகளின் கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளார்.

கடந்த மாதம் பெட்ரோல் பங்கில் இரவு பணியில்  இருந்த விஜியை கூலி படையினர் கொடுவாவால் சராமாரியாக வெட்டினர். அதனை தடுக்க வந்த அரவிந்த சாமி என்ற நபரையும் வெட்டி விட்டு கூலிப்படை தப்பி சென்றுள்ளனர்.காயமடைந்த இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து வழக்கு பதிவு செய்த விசாரணை மேற்கொண்ட செங்கம் போலீசார் விஜியை கொலை செய்ய முயற்சி செய்ததாக பெண்ணின் தந்தை உட்பட ஐந்து பேரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் கூலிப்படையை வைத்து கொலை செய்ய முயற்சித்ததாக பூசாரி ஜானகிராமன் செங்கம் காயிதே மில்லத் தெருவை சேர்ந்த மதிவாணன் மற்றும் அறிவு என்ற மூன்றுபேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார் அதனை ஏற்ற மாவட்ட ஆட்சியர் மூன்று பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web