JEE தேர்வில் குறைந்த மதிப்பெண்.. விரக்தியில் +2 மாணவர் தற்கொலை!

 
JEE

சென்னை தாம்பரம் சேலையூரை அடுத்த திருவாஞ்சேரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பென்னிவர்ட்  வசித்து வருகிறார். இவரது மகன் இவான் ஜோசுவா (வயது 17). இவர் சேலையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருந்தார். ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலைப் படிப்புகளில் சேருவதற்கு JEE நுழைவுத் தேர்வை எழுதுவது கட்டாயமாகும்.

இந்நிலையில் நேற்று காலை தந்தை பென்வர்ட் வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில், மனைவி தோழியை பார்க்க சென்றுள்ளார். மகன் இவான் ஜோசுவா வீட்டில் தனியாக இருந்தார். மாலையில் வீடு திரும்பிய அவரது பெற்றோர் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் கதவை தட்டினர். நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் இவான்ஜோஸ்வா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சேலையூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை

மாணவனின் மரணம் குறித்து பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஜே.இ.இ. கடந்த 24ம் தேதி நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியானபோது, இவான் ஜோசுவா குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web