விஜய் யாரோ எழுதி கொடுத்ததை படிக்கிறார் ... மா.சுப்பிரமணியன் விமர்சனம்!
இன்று விஜய் பிரச்சாரத்தில் திமுகவை விமர்சித்து பேசிய நிலையில், யாரோ எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. அந்த கட்சியின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தனது முதல்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்கிய அவர் இன்று நாகையில் 2ம் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார் .

பிரச்சாரத்தில் பேசிய விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்தார். மேலும் நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்களே இல்லை என தெரிவித்தார் . இந்நிலையில், விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “தவெக தலைவர் விஜயின் பேச்சு, யாரோ எழுதிக் கொடுத்து படிப்பதுபோல் உள்ளது. நாகை மருத்துவமனைக்கு சென்று விஜயை பார்க்கச் சொல்லுங்கள்” என்று தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
