மதுரை குலுங்குது... அதிகாலை வைகையாற்றில் இறங்கினார் அழகர்... உள்ளூர் விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவு!

சித்திரை திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் இரவு சுவாமி அம்பாள் 4 மாசி வீதிகளில் உலா வரும் நிலையில், மதுரையில் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். தினமும் மாலை நேரங்களில் மாசி வீதிகள் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தது.
கள்ளழகர் அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி ஏப்ரல் 21ம் தேதி புறப்பட்ட நிலையில், நேற்று ஏப்ரல் 22ம் தேதி காலை மதுரை மாநகரின் எல்லையான மூன்று மாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நிகழ்வு நடைபெற்றது. பக்தர்கள் கரகோஷத்துடன் அழகரை வரவேற்றனர். இன்று ஏப்ரல் 23ம் தேதி அதிகாலை 5.51 மணியிலிருந்து 6.10 மணிக்குள் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது.

இதை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் குவிந்திருந்தனர். கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வையொட்டி, உள்ளூர் மக்களும் திருவிழாவில் கலந்து கொள்ள வசதியாக இன்று ஏப்ரல் 23ம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 11ம் தேதி பணிநாளாக செயல்படும் என அறிவித்துள்ளார்.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
