மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை!
தூத்துக்குடியில் மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்தவர் குணசேகரன் (60). இவரது மனைவி காசி அம்மாள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் திருமணம் ஆகி நேரு காலனியில் தனி குடித்தனம் நடத்தி வருகின்றார், மகளுக்கு திருமணம் ஆகி செவத்தையா புரத்தில் உள்ளார். காசிஅம்மாள் ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார்.

இதனால் ஓராண்டுகளாக தனியாக இருந்த குணசேகரன் மனைவியின் மரணத்தால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
