தொடரும் அவலம்... ஆன்லைன் ரம்மியில் ரூ.10 லட்சத்தை இழந்தவர் தற்கொலை!

 
ஆன்லைன் ரம்மி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பெரியார் நகர் பால்வாடி தெருவை சேர்ந்தவர் ராமு (வயது 38). திருமணமாகாத நிலையில், அரக்கோணம் பழனிப்பேட்டையில் போண்டா கடை நடத்தி வந்தார். இந்நிலையில் அவர் செல்போனில் ஆன்லைன் ரம்மி கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு ஏராளமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை ஈடுகட்ட தனியார் வங்கிகள் மற்றும் தெரிந்தவர்களிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள் ராமுவிடம் செல்போனை வாங்கி உடைத்தனர். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் அவருக்கு இருந்த மோகத்தால், மீண்டும் ஒருவரிடம் கடன் வாங்கி புதிய ஆண்ட்ராய்டு மொபைலை வாங்கி ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை விளையாடத் தொடங்கினார். இந்நிலையில் வங்கியில் கடன் கொடுத்தவர்கள் ராமுவிடம் பணத்தை திருப்பி கேட்டனர். இதில், மனமுடைந்த ராமு, திருத்தணியில் உள்ள வீட்டில் உள்ளவர்களிடம் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு வெளியே சென்றார்.

அரக்கோணம்  தணிகை போளூர் அருகே விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தீயணைப்பு துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மியால் பல குடும்பங்கள் சீரழிந்து வரும் நிலையில், கிணற்றில் போண்டா கடை நடத்தி வந்த திருமணமாகாத சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரக்கோணத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web