நண்பருக்காக பைக் திருட்டில் ஈடுபட்ட நபர்.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!

அசோக் என்பவர் பெங்களூரில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவருக்கு அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை. இதனால், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை திருடி விற்பனை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த அசோக்கின் மனைவி அவரை விட்டு விட்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த அசோக், தனது நண்பர் சதீஷ் உதவியுடன் கிரி நகர் பகுதியில் ஐடி ஊழியரின் இருசக்கர வாகனத்தை திருடினார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து அசோக், சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு குறித்து நீதிபதி அசோக்கிடம் விசாரித்தபோது, தனது நண்பரின் மனைவிக்கு மார்பக புற்றுநோய் இருந்ததால் தான் வாகனங்களை திருடியதாக கூறினார். மேலும் திருடிய பணத்தையும் நண்பரின் மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்கு கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!