மனைவியின் கழுத்தை இறுக்கி, பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்... பரபரப்பு வாக்குமூலம்!

 
மனைவி

மனைவியைத் தனியே அழைத்துச் சென்று, துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்ததாக கணவன் வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம், லிங்கால் மண்டலம் ராயவரம் கிராமத்தில் வசித்து வருபவர் சைலம். இவர் மஹபூப் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ராவணி எனும் இளம்பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், கடந்த 2014ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்நிலையில் ஸ்ராவணிக்கு தனது அக்காவின் கணவருடன் தகாத உறவு இருந்து வந்ததாக தெரிகிறது. இதையறிந்த சைலம், அவரை கண்டித்து வந்துள்ளார். இதனால் கணவனையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு, ஸ்ராவணி தனது அக்காவின் கணவருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு மீண்டும் கணவனிடம் திரும்பி வந்தபோது, சைலம் ஸ்ராவணியை மனைவியாக ஏற்றுக் கொண்டாராம்.

ஆம்புலன்ஸ்

இந்நிலையில் குடிபழக்கத்துக்கு ஆளான சைலம், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்வாராம். ஸ்ராவணி அடிக்கடி செல்போனில் யாரிடமோ பேசுவதையும், சாட்டிங் செய்வதையும் கவனித்த சைலம், அவரை மீண்டும் கண்டித்துள்ளார். இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஸ்ராவணி, தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம். அங்கிருந்தபடி மஹபூப் நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து, குழந்தைகளையும் கவனித்து வந்தார்.  மனைவியின் நடத்தையால் கடும் கோபத்தில் இருந்த சைலம், அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அன்றிரவு மனைவிக்கு போன் செய்து, ‘தான் மாறிவிட்டதாகவும், இனி சண்டையிட மாட்டேன் என்றும் இருவரும் காலையில் சோமசிலாவிற்கு செல்வோம்’ எனக் கூறியுள்ளார்.  

ஆம்புலன்ஸ்
உடனே ஸ்ராவணி, தனது இரு குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி விட்டு, சைலத்துடன் சோமசிலாவிற்கு பைக்கில் சென்றார். கொத்தபள்ளி மண்டலத்தில் உள்ள சாதாபூர் அருகே சென்றுக் கொண்டிருந்த போது சைலம், ‘சீதாப்பழங்களை சேகரித்து வரலாம்’ எனக்கூறி அவரை வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு ஸ்ராவணி கழுத்தில் துப்பட்டாவை சுற்றி நெரித்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். அதன் பிறகு ஸ்ராவணியின் சடலத்தின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.  இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?