சென்னையில் மாரத்தான் போட்டி... 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

 
மாரத்தான்


சென்னையில் இன்று காலை நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பிரிவுகளில் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன .

சென்னையில் இன்று காலை சென்னை மாரத்தான் போட்டியின் 13வது சீசன் போட்டி நடைபெற்றது . பிரெஷ் ஒர்க்ஸ் இன்க், தி சென்னை ரன்னர்ஸ் ஆகியவை இணைந்து இந்த மாரத்தான் போட்டியை நடத்தின. 

மாரத்தான்

முழு மாரத்தான் (42.195 கி.மீ), பெர்பெக்ட் 20 மைலர் - (32.186 கி.மீ), அரை மாரத்தான் (21.097 கி.மீ) மற்றும் 10 கி.மீ. ஓட்டம் என மொத்தம் நான்கு பிரிவுகளின் கீழ் இந்த போட்டிகள் நடைபெற்றன .

நேப்பியர் பாலத்தில் இருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 42.195 கி.மீ, ஈ.சி.ஆர், நேப்பியர் பாலத்தில் இருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 32.186 கி.மீ, எலியட்ஸ் கடற்கரையில் இருந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் வரை 21.097 கி.மீ, மற்றும் நேப்பியர் பாலத்திலிருந்து சிவானந்தா சாலை வரை 10 கி.மீ வரை போட்டிகள் நடைபெற்றன. 4 மணிக்கு தொடங்கிய மாரத்தான் போட்டிகள் காலை 8 மணி அளவில் நிறைவடைந்தது. 

மாரத்தான்

மாரத்தான் போட்டியில் 25,000-க்கும் அதிகமான ஓட்டப்பந்தய வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர். தொடர்ந்து மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web