இலங்கையில் பயங்கர நிலநடுக்கம்... 6.2 ரிக்டரால் அலறியடித்த மக்கள்!

இலங்கையில் ரிக்டர் அளவுகோல் 6.2 அளவில், மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புலிருந்து தென்கிழக்கே 1326 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கு அருகே மதியம் 12.31 மணியளவில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கொழும்புவில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Earthquake of Magnitude:6.2, Occurred on 14-11-2023, 12:31:10 IST, Lat: -2.96 & Long: 86.54, Depth: 10 Km ,Location: 1326km SE of Colombo, Sri Lanka for more information Download the BhooKamp App https://t.co/4djY2ype7T@KirenRijiju @Dr_Mishra1966 @ndmaindia @Indiametdept pic.twitter.com/yqXchM4hZN
— National Center for Seismology (@NCS_Earthquake) November 14, 2023
இதுகுறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் தனது எக்ஸ் பக்கத்தில், கொழும்புவுக்கு தென் கிழக்கே 1326 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், மதியம் 12.31 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் மற்றும் மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!