சிக்கிமில் பயங்கர நிலச்சரிவு... 4 பேர் பலி, 3 பேர் மாயம்!
சிக்கிம் மாநிலத்தில் நேற்று நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 4 பேர் பலியாகினர். இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு பெண் கவலைக்கிடமாக சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மாயமான 3 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு சிக்கிம், யாங்தாங் தொகுதிக்குள்பட்ட ரிம்பி பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று செப்டம்பர் 11ம் தேதி வியாழக்கிழமை நள்ளிரவு நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை அடைவதற்கான பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் தாமதமாகியுள்ளன. சம்பவ இடத்துக்கு விரைந்த எஸ்எஸ்பி பாதுகாப்புப் படையினர் காவல்துறையினருடன் இணைந்து ஆற்றை கடக்க தற்காலிக மரப் பாலத்தை அமைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பெண்களை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதில், ஒருவர் சிகிச்சைப் பலனின்றி பலியான நிலையில், மற்றொருவர் கவலைக்கிடமாக உள்ளார். நிலச்சரிவு சம்பவத்தில் மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கெய்சிங் ஷெரிங் ஷெர்பா தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
