கள்ளச்சாராய வழக்கில் முக்கிய குற்றவாளி மாதேஷ் கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 50பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. இவர்க்ளின் மரணத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி சின்னதுரை நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தலைமறைவாக இருந்த அவரை கடலூரில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ஏற்கனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான விஷச் சாராய வியாபாரி கோவிந்தராஜ், சகோதரர் தாமோதரன், கோவிந்தராஜ் மனைவி விஜயா ஆகிய 3 பேருக்கு 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது. அதே போல் ஆந்திராவில் இருந்து ‘மெத்தனாலை’ கைமாற்றி விட்டது தொடர்பாக மரக்காணத்தை சேர்ந்த மாதேஷ் என்பவரை போலீசார் சென்னையில் கைது செய்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
