மே 14ம் தேதி உள்ளூர் விடுமுறை... கலெக்டர் திடீர் அறிவிப்பு!

 
உள்ளூர் விடுமுறை

 தமிழகத்தில் பொது மற்றும் அரசு விடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள், திருவிழாக்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டையா மகாநதி கரையில் உள்ள கங்கை அம்மன் கோவில் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் நடைபெறும்   கோவில் அம்மன் சிரசு திருவிழா  சுற்று வட்டாரத்தில்  உள்ள கிராம மக்கள் அனைவரும் ஒன்றாககூடி  வெகு விமர்சையாக கொண்டாடுவர்.  

வேலூர் கங்கை அம்மன்

சிலம்பாட்டம் ,மயிலாட்டம், புலி ஆட்டம் ,கரகாட்டம் உட்பட  பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பம்பை , உடுக்கை , மேளதாளம் முழங்க குடியாத்தம் தரணம்பேட்டை  முத்தாலம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு வரப்படும்.  இந்த திருவிழாவிற்கு வேலூர்,  தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் மக்கள் வந்து செல்வர்.

இதனை சிறப்பாக கொண்டாடும் வகையில் , பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாடவும் மே 14ம் தேதி  வேலூர் மாவட்டத்திற்கு   உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. குடியாத்தத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கை அம்மன் திருக்கோவில் சிரசு திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் மே 14 ம் தேதி  விடுமுறை விடப்படுகிறது என   மாவட்ட கலெக்டர்  தெரிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி

From around the web