ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் மாயாவதி!
சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டில் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஆம்ஸ்ட்ராங் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர், அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. ஆம்ஸ்ட்ராங் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.
#WATCH | Chennai, Tamil Nadu: BSP Chief Mayawati and party's National Coordinator, Akash Anand pay their last respects to Tamil Nadu BSP President K Armstrong.
— ANI (@ANI) July 7, 2024
K Armstrong was hacked to death by a group of men near his residence in Perambur on 5 July. pic.twitter.com/4kQImXFYX9
பிரேத பரிசோதனைக்கு பின் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி வரவுள்ளதாக தகவல் வெளியானது.
மாயாவதியும் இதை உறுதி செய்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு உத்தரபிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். மாயாவதி வருகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் பெரம்பூர் சென்றார் மாயாவதி. பின்னர், அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மாயாவதி அஞ்சலி செலுத்தினார். அப்போது அங்கிருந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!