ஜனவரி 15ம் தேதி இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு... மாநகராட்சி அறிவிப்பு!

 
தமிழக அரசு தமிழக அரசு

ஜனவரி 15ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து இறைச்சிக் கூடங்களையும்  அரசு உத்தரவின்படி மூட சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. 

ரிப்பன் மாளிகை

இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வருகின்ற 2025ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி புதன்கிழமை அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படவுள்ளன.

இறைச்சி மட்டன் சிக்கன்

எனவே, இறைச்சிக் கடை வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவினை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!