முழு கொள்ளவை எட்டுகிறது மேட்டூர் அணை... இன்று கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பு!

எந்த நேரத்திலும் முழு கொள்ளளவை எட்டிவிடுவதைப் போல நீர் தழும்ப தழும்ப வந்து நிறைகிறது மேட்டூர் அணையில். கால்வாய் பாசனத்துக்காக ஆகஸ்ட் 1ம் தேதி நீர் திறந்து விடப்பட இருந்த நிலையில், நீர் வரத்து திருப்திகரமாக இருப்பதால், அணை நிரம்பும் வகையில் உள்ளதால் இரண்டு நாட்கள் முன்னதாகவே இன்று மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்காக நீர் திறந்து விடப்படுகிறது. ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கால்வாய் பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்படும். இந்த ஆண்டு மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் முன்கூட்டியே கால்வாய் பாசனத்துக்கு நீர் திறந்துவிடப்பட உள்ளது. இன்று காலை வினாடிக்கு 200 கன அடிநீர் முதலில் திறந்து விடப்படுகிறது. இதனையடுத்து நீர் திறப்பு அளவு அதிகரிக்கப்படும்.
காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படலாம் என்பதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பியுள்ளன. அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் கடந்த 2 வாரங்களாக காவிரியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வினாடிக்கு 1,52,903 கன அடியாக இருந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை நீர்வரத்து வினாடிக்கு 1,53,091 கன அடியாக அதிகரித்தது.
112.26 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் மாலையில் 116.36 அடியாக உயர்ந்தது. அதேபோல் நீர் இருப்பு 81.67 டிஎம்சியில் இருந்து இன்று 87.78 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. நேற்று அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று காலை முதல் படிப்படியாக 20,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட இன்னும் 3.50 அடி பாக்கி உள்ளது. மேலும் 5 டிஎம்சி தண்ணீர் அணையில் சேமிக்கப்பட்டு முழு கொள்ளளவை எட்டும்.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும். அணை நிரம்பினால் உபரி நீரை வெளியேற்றவும், காவிரியில் வெள்ளம் வந்தால் கண்காணிக்கவும் நீர்வளத்துறை மூலம் அணை வளாகத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இருந்து நீர்வரத்து நீடிக்கும் நிலையில் மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எந்த நேரத்திலும் எட்டக் கூடும். இதன் பின்னர் 16 கண் மதகுகள் வழியாக உபரி நீர் திறந்துவிடப்பட உள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 90.34 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 20,000 கன அடிநீர் திறந்துவிடப்படுகிறது. மேட்டூர் அணை எந்த நேரமும் நிரம்பும்; அணையில் இருந்து கூடுதலாக நீர் திறக்கப்படலாம் என்பதால் மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 'தென்மேற்கு பருவமழை பெய்யும் பட்சத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை 120 அடியை எட்டும். உபரி நீர் எந்த நேரத்திலும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவிரி கரையோரம், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். உடைமைகளுக்கு பாதுகாப்பு உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்' என்றார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!