அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்து... 49 பேர் பலி; 100 பேர் மாயம்!
மொரிடேனியா நாட்டின் கடல் பகுதிகள் சென்றுக் கொண்டிருந்த அகதிகள் படகு, திடீரென கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் படகில் பயணித்தவர்களில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 100 பேர் மாயமாகி உள்ள நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கடல் வழியாக அகதிகளாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இந்த பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.
இந்நிலையில் மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காம்பியா, செனகல் நாடுகளை சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைய மத்திய தரைக்கடல் வழியாக படகில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகே கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்த தகவலறிந்து விரைந்து சென்ற மொரிடேனியா கடற்படையினர், கடலில் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 17 பேரை மீட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேர் மாயமாகி உள்ளனர். இதையடுத்து, மாயமானவர்களை தேடும் பணியில் மீட்ப்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
