அதிர்ச்சி... ஓடும் ரயிலில் மாடல் அழகிக்கு பாலியல் தொல்லை!

 
பாலியல் தொல்லை

தமிழகத்தை சேர்ந்த மாடல் அழகி ஒருவர் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு ரயிலில் சென்றுள்ளார். அப்போது, அதே கோச்சில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் மாடலிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அச்சத்துடன் பயணித்த பெண், திருவனந்தபுரம் வந்தவுடன் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். இச்சம்பவம் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

தற்கொலை இளம்பெண் தீ விபத்து கற்பழிப்பு பாலியல் கொலை க்ரைம்

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு கோட்டயம் ரயில்வே போலீசாருக்கு மாற்றப்பட்டது. போலீஸ் விசாரணையில், கொல்லத்தை சேர்ந்த அன்சர்கான் (25) என்பதும், மாடல் அழகிக்கு மானபங்கம் செய்ததும், அவருக்கு ஏற்கனவே வேறு சில குற்ற வழக்குகளில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.

சிசிடிவி பதிவுகள் மற்றும் செல்போன் டவர் வீச்சுகளின் அடிப்படையில் அன்சர் கான் நேற்று கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறியதாவது:- பெண்ணிடம் சில்மிஷம் செய்த நபர் கோட்டயம் ரயில் நிலையத்தில் இறங்கி தப்பியோடிவிட்டார்.

பின்னர், சிசிடிவி கேமராவில் சந்தேக நபர்களின் முகங்கள் பதிவாகியுள்ளன. இந்த காட்சிகள் மாநிலம் முழுவதும் உள்ள ரயில்வே காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் அந்த நபர் அடையாளம் காணப்பட்டார். மேலும் அவரது செல்போன் சிக்னல் மூலம் அப்பகுதியில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது மேலும் சில வழக்குகள் உள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

 தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web