குடை எடுத்திட்டு போங்க... அடுத்த 3 மணி நேரத்திற்கு 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
![வெயில் , மழை](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/fcfce4a564514b14a45a7003fde5af09.png)
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் வாரத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசி இதமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 17ம் தேதி வரை தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தின் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!