அடுத்த 3 மணி நேரத்திற்கு 30 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை!

 
5 மாவட்டங்களில் கன மழை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மேற்கு திசை மாற்றின் வேகமாறுபாடு காரணமாக பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து இன்றும் தமிழகத்தில் 30 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கப் போவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கடலூர், சேலம், கோவை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், நீலகிரி, திருப்பூர், அரியலூர், நாகை, திருவண்ணாமலை, பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, திருச்சி, கன்னியாகுமரி  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனைத் தொடர்ந்து  தற்போது தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்  பகுதிகளில் இன்று முதல் ஜூலை 31ம் தேதி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
மழை

அதன்பிறகு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மட்டும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னையை பொறுத்தவரை  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அத்துடன் நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web